இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. காட்டூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோவையில் இன்று அழகு சாதன விற்பனை கடையில் பயங்கர தீ appeared first on Dinakaran.