பின்னர் ஒரு குழு கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 4 குழுக்கள் யானைகளை விரட்டக்கூடிய பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கனவே 5 யானைகள் வனத்திற்குள் சென்றிருக்க கூடிய சூழலில் எஞ்சி இருக்கக்கூடிய குட்டி உட்பட 6 யானைகள் முட்புதர்களுக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. முட்புதரை சுற்றி வனத்துறை அதிகாரிகள் 4 பகுதிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் உலா வருவதினால் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் யானைகள் இருக்கக்கூடிய சுற்றுவட்டார சாலையில் பயணிக்க வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post கோவை தொண்டாமுத்தூரில் யானைகளை அடர்வனத்திற்குள் விரட்டும் பணிகள் தீவிரம்: கூடுதல் குழுக்கள் அமைத்து விரட்ட கோரிக்கை appeared first on Dinakaran.