அதில்,டிரைபெட்டின் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இது பற்றி விவாதிக்க அதிகாரிகளின் கூட்டத்தை டிரைபெட் தலைவர் கூட்டினார். அதில், கீதாஞ்சலியும் இதர அதிகாரிகளும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து, கீதாஞ்சலி குப்தாவை சஸ்பெண்ட் செய்து ராம்சிங் ரத்வா உத்தரவிட்டார். இந்த உத்தரவு செல்லாது என ஒன்றிய பழங்குடியினர் விவகார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. டிரைபெட்டின் தலைவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுகிறார். அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
The post டிரைபெட் நிர்வாக இயக்குனர் நீக்கம்: ஒன்றிய பழங்குடியினர் அமைச்சகத்தில் மோதல் appeared first on Dinakaran.