திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ரபிகர் மாகர் உயிரிழந்துள்ளார்.