சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறும்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளதாக அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. 2023 ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023-ஐ நடத்துவோம் என்று அறிவிப்பதில் SDAT உடன் இணைந்து தமிழ்நாடு அரசு பெருமிதம் கொள்கிறது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நம்ம சென்னைக்கு திரும்புகிறது. உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நம்ம சென்னையில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆசியாவின் 6 முன்னணி நாடுகள் போட்டியிடுகின்றன.ஆசியாவின் மிகப் பெரிய ஹாக்கி களியாட்டத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைக்கு நமது மாநிலத்தில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆடவருக்கான ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே நடைபெறுகிறது. செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமையும். 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் ஆசியாவின் முன்னணி அணிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே முதலமைச்சர் நேரம் இருந்தால், இந்த போட்டிகளை அவரே நேரில் வந்து துவக்கி வைப்பார். இனிதான் இந்த ஹாக்கி தொடருக்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று, இந்த போட்டியையும் தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம்’’ என்றார்.

The post சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடைபெறும்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: