காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது..!!

பெங்களூர்: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. காவிரி ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு இன்று வரை வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக காவிரியில் வினாடிக்கு 4,000 கனஅடி நீர் மட்டுமே கர்நாடகா திறந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நீர் திறப்பை குறைத்த கர்நாடகா மீது புகார் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்த நிலையில் கூட்டம் தொடங்கியுள்ளது.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: