போதையில் மனைவிக்கு டார்ச்சர் போலீஸ்காரர் மீது வழக்கு

கோவை: மதுபோதையில் மனைவியை தாக்கி டார்ச்சர் செய்த உளவு பிரிவு போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சோனேஷ் (30). இவர் மனைவி நித்யாஸ்ரீ(24). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. சோனேஷ் சட்டீஸ்கர் மாநிலத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆகி சில நாட்களில் அவர் தனது மனைவியை சட்டிஸ்கர் அழைத்துச் சென்றார். அங்கே அவர் தனது மனைவியை மது போதையில் தகாத முறையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. கணவரின் தொல்லை தாங்க முடியாமல் நித்யாஸ்ரீ கோவையில் உள்ள கணவரின் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

அங்கேயும் அவரை இருக்க விடாமல் அவரது குடும்பத்தினர் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து நித்யாஸ்ரீ கொடுத்த புகாரின்பேரில் கணவர் சோனேஷ் மற்றும் அவரது தந்தை குலசேகரன், தாய் புனிதவதி ஆகியோர் மீது கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதையில் மனைவிக்கு டார்ச்சர் போலீஸ்காரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: