இதில் ஹர்பிரீத் சிங், அவரது 11 வயது மகன் கொல்லப்பட்டனர். பின்சீட்டில் அமர்ந்திருந்த ஹர்பிரீத்சிங் மகனின் நண்பன் காயம் எதுவுமின்றி தப்பினான். ரவுடி கும்பல்களுக்கு இடையயோன மோதலின் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி எட்மன்டன் போலீஸ் அதிகாரி கூறுகையில்,‘‘ சுட்டு கொல்லப்பட்ட ஹர்பிரீத்சிங் எட்மன்டன் நகரில் குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர். அவரை சுட்டு கொன்றவர் யார் என்பது தெரியவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றார். போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ ரவுடி கோஷ்டிகள் இடையேயான மோதலில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 3நாட்களுக்கு முன் பரம்வீர் சாகில் என்ற ரவுடி சுட்டு கொல்லப்பட்டார். அந்த கொலைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளது’’ என்று தெரிவித்து உள்ளன.
The post கனடாவில் பயங்கரம் சீக்கியர்,11 வயது மகன் பட்டப்பகலில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.