இந்நிலையில் கடைசி நேர தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்த நிலையில், நாளை (நவ. 21) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ெசய்து வருகின்றனர். வேட்பாளர்களும் அவரவர் தொகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி ரொக்கம், ஆபரணங்கள், ேபாதைப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் ரூ.644 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.106 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலோடு ஒப்பிடுகையில், 920% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 23ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதால் ராஜஸ்தானில் நாளை பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.