முன்னதாக, இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக, ஏற்கெனவே இருந்த அனைத்து பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதனால் வாரணவாசியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பணிகள் காரணமாக, சாலையோரத்தில் நிழற்குடை இல்லாததால், வெட்டவெளியில் வெயில் மற்றும் மழைக்காலங்களில் நின்று, நாள்தோறும் அரசு பேருந்துகளில் சென்று வருவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் பேருந்து நிழற்குடை அமைக்கப்படாததால், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான மக்கள் வெயிலில் அரசு பேருந்துக்காக நீண்ட நேரம் நிற்பதால் திடீரென மயங்கி விழும் அவலநிலை உள்ளது.
வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற இடங்களில் மீண்டும் பேருந்து நிழற்குடை அமைக்கும்படி மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, வாரணவாசி பகுதியில் 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில், மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்காக புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post வாரணவாசியில் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்கள்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.