திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. தற்போது 1347 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் மற்றும் வரத்து கால்வாய் மூலமாக நீர்த்தேக்கத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நீர்த்தேக்கத்தின் மதக கரைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. விரிசல்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, நீர்த்தேக்கத்தின் கரைகள் முழுவதையும் கருங்கல் மூட்டைகள், மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் பணியில் பொதுப்பணி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பூண்டி நீர்த்தேக்க கரை சீரமைப்பு appeared first on Dinakaran.