ராஜஸ்தானில் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது. 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு NDRF வீரர்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரா கிராமத்தில்நேற்று மாலை 6 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டரை வயது பெண் குழந்தை அங்கு இருந்த 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை, குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு முதல் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: