இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் 9 பள்ளிகளிலும் போலீசார் சோதனை செய்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் பள்ளியின் இ-மெயில் முகவரி அறிந்தவராகத்தான் இருக்கும்கூடும். அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தரா அல்லது பல்வேறு நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post மதுரையில் இ-மெயில் மூலம் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் சோதனையால் பரபரப்பு appeared first on Dinakaran.