இந்த விபத்தில் படகில் இருந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 6 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலை அதிகாரி ஒருவர் மட்டும் நீந்தி தப்பித்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மராட்டியத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post புனேவில் படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்பு! appeared first on Dinakaran.