இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் காவல்துறை சார்பில் வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட வேண்டும், மனுதாரரால் அன்றாட பணிகளை கூட மேற்கொள்ள கூட முடியவில்லை என்று அமர் பிரசாத் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால், இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து விசாரணையை நீதிபதி நாளை தள்ளிவைத்தார்.
The post பாஜ பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கு அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.