இதனை தொடர்ந்து, நேற்று காலை நான்கு கால யாக பூஜைகள், வடுகபைரவர் பூஜை நடந்தன. பின்னர், 64 பைரவர்களுக்கும் ஸ்ரீ மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவச்சாசாரியார்கள் நடத்தினர். அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் காமாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது.
இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் முக்கிய பிறமுகர்களாக திருத்தணி மின்வாரியகோட்ட செயற்பொறியாளர் பாரி ராஜ், உதவி கோட்ட பொறியாளர்கள் ராஜேந்திரன், கோட்டீஸ்வரி, உதவி பொறியாளர்கள் வேண்டாம் அமிர்தம், புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், சென்னை, திருவள்ளூர் வேலூர் மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிப்பட்டனர்.
The post அகத்தீஸ்வரர் கோயிலில் 64 பைரவர்கள் சிறப்பு யாகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.