ஆயுதபூஜையை முன்னிட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 450 மூட்டை பொரி தயாரிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா [பரவல் காரணமாக பொரி தவிப்பு மற்றும் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இந்தாண்டு வியாபாரம் நன்றாக அமையும் என பொரி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே 100 லிட்டர் அளவு கொண்ட ஒரு மூட்டை பொரியின் விலை கடந்த ஆண்டை போலவே ரூ.400-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு படி பொரி ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் பொரி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு மழை குறைவாக இருப்பதால் பண்டிகைக்கான பொரி தயாரிப்பு பாதிக்கப்படாது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post நெருங்கும் ஆயுதபூஜை: கிருஷ்ணகிரியில் மும்முரமாக நடக்கும் உற்பத்தி.. நடப்பாண்டில் சூடு பிடிக்கப் போகும் பொரி விற்பனை..! appeared first on Dinakaran.