×

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது நடவடிக்கை கோரி அதிமுக சார்பில் புகார்

ஆவடி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் தலைமையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சரும், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில செயலாளருமான எஸ்.அப்துல் ரஹீம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தனர்.

The post ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது நடவடிக்கை கோரி அதிமுக சார்பில் புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Aavadi Police Commissionerate ,Aavadi ,BJP ,president ,chief minister ,Edappadi Palaniswami ,Avadi Police Commissionerate ,Dinakaran ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...