இந்நிலையில், தன்னைப்பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், 24 மணிநேரத்துக்குள் ஏ.வி.ராஜு முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.