நூலக கட்டுமான பணிகள் முடிந்து, தற்போது நூல்கள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்குள் இப்பணி முழுமை அடைந்துவிடும். அதனைத்தொடர்ந்து, 30ம் தேதிக்குள், கலைஞர் சிலை நிறுவுதல் மற்றும் அனைத்து பணிகளும் முழுமை பெற்று திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், தேதியை அறிவித்து திறந்து வைக்க உள்ளார்.தமிழக இளைஞர்களின் நலனுக்காக, வேலைவாய்ப்பை உருவாக்க மட்டுமே முதல்வர் வெளிநாடு செல்கிறார். அரசு செம்மையாக நடைபெற உந்துசக்தியாக உதவுகிற மனம் ஆளுநர் படைத்திருக்க வேண்டும்.
ஆனால் ஆளுநர் மனம்போன போக்கில் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை.அதை நாங்கள் கண்டுகொள்ளவும் இல்லை. அண்ணா காலத்தில் இருந்தே தமிழகம் இருமொழிக்கொள்கை உடைய மாநிலம். தமிழ், ஆங்கிலம் தான் இங்கு இருக்கும். தமிழுக்குத்தான் இங்கு முதலிடம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கலைஞர் நினைவு நூலகம் மே 30ல் தயாராகி விடும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.