கிராமபுற பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவன் டேனியேல் கூறுகையில், தனியார் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் எனது தந்தை ஜெபக்குமாரின் ஊக்கத்தால், எனக்கு 8 வயது முதல் இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆர்மோனியம், டிரம்ஸ், கீ போர்ட் இசை பயிற்சியில் ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு அரசு கலைத் திருவிழா மூலம் எனது இசை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத் திருவிழாவில் கீ போர்ட் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து முதலவர் மு.க.ஸ்டாலினிடம் சான்று மற்றும் விருது பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறேன். இசை பயணத்தில் எனது தந்தை, ஆசிரியர்கள், சக நண்பர்கள் ஊக்கம் பெரும் உதவியாக உள்ளது. எதிர்காலத்தில் சிறந்த இசை அமைப்பாளராக வர வேண்டும் என்பதே லட்சியம் என கூறினார்.
The post கலை திருவிழா கொண்டாட்டம் அரசு பள்ளி மாணவன் மாநில அளவில் முதலிடம் appeared first on Dinakaran.