முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமான படை தலைமை தளபதி வி.ஆர்.சவுதாரி ஆகியோரும் உரை நிகழ்த்தினர். நாளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,‘‘ தற்போதைய பாதுகாப்பு நிலைமை, ராணுவத்தின் தயார் நிலை ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மேலும் பிராந்திய பாதுகாப்பு நிலைமை, சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். அதே போல், ஹமாஸ்- இஸ்ரேல், ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் குறித்தும் விவாதிக்கப்படும்’’ என்றனர்.
The post ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் தொடங்கியது appeared first on Dinakaran.