இந்த சூழலில் அங்கித் திவாரி மீது, அமலாக்கத்துறை சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில், திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதித்துறை நடுவர் விடுப்பில் இருந்ததால், பொறுப்பிலிருந்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் அங்கித்திவாரியை, விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, ஜன. 9ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post அங்கித் திவாரியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனு: திண்டுக்கல் கோர்ட்டில் விசாரணை தள்ளி வைப்பு appeared first on Dinakaran.