ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தையல் தொழில் செய்ய கடனுதவி: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்று தொழில் செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தகுதியான பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு கடனுதவி பெற விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தையல் தொழில் செய்ய கடனுதவி: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: