நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதய சிகிச்சை நிபுணரிடம் பரிசோதனைக்காக அனுமதி கேட்கப்பட்டதாகவும், அதன்படி இன்று காலை அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. ரத்த நாள வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

The post நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது: அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: