இதையடுத்து கலெக்டர் கூறுகையில், ”கர்ப்ப காலத்தில் சிசுவின் பாலினத்தை தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். குழந்தை திருமணம் செய்பவர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தகவல் கொடுக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார். கூட்டத்தில், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செந்தில், இணை இயக்குநர் கோபிநாத் மற்றும் 92 ஸ்கேன் மையங்கள், 50 தனியார் மகப்பேறு மருத்துவர்கள், 82 தொழிற்சாலை மருத்துவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.