ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு

ஆவடி: ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருமுல்லைவாயலில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர கிழக்கு பகுதிச் செயலாளர் பேபி சேகர் ஏற்பாட்டில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கட்சியில் உள்ள அடிப்படை உறுப்பினர், பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது, புதிய உறுப்பினர்கள சேர்க்கை குறித்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய வாக்காளர் சேர்க்கை குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஆவடி மாநகர செயலாளர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: