×

நிசங்கா சாதனை

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிசங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணியுடன் பல்லெகெலே மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய நிசங்கா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 210 ரன் (139 பந்து, 20 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார்.

நிசங்கா – அவிஷ்கா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 381 ரன் குவித்தது. அவிஷ்கா 88, கேப்டன் குசால் 16, சமரவிக்ரம 45 ரன் எடுத்தனர்.

* நெதர்லாந்து, நமீபியா அணிகள் நேபாளத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளன.

The post நிசங்கா சாதனை appeared first on Dinakaran.

Tags : Padum Nisanka ,Nisanga ,Afghanistan ,Pallekele ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில்...