சென்னை: காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெற்றியும், தோல்வியும் இருக்கத்தான் செய்யும். மக்களைச் சந்திக்காமல், அவர்களது பிரச்னைகளை முழுவதுமாகவும் அறிந்து கொள்ளாமல் அரசியலுக்கு வர நினைக்கிறார் ரஜினி.