கிருஷ்ணகிரி, டிச.1:கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை, ஆசிரியர்கள் கூட்டத்தில் அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நெடுமருதி அரசு உயர்நிலைப்பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அருண். இவர், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்தபோது, பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி, பள்ளியில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டி, அதில் பேசும்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரிடமும், கடந்த 27ம் தேதி நேரடியாக விசாரணை நடத்தி, அவர்களிடம் எழுத்துபூர்வமாக அனைத்து தகவல்களையும் பெற்று கொண்டனர்.