காரைக்கால், நவ.20: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருவது போல், காரைக்கால் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. இதுவரை 43,200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், காரைக்காலில் நேற்று வரை கொரோனோ தொற்று 3,556ஆகவும், பலி எண்ணிக்கை 64ஆகவும் இருந்தது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வருகிறது.