காரைக்கால், நவ.9: காரைக்கால் பூமங்களம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. காரைக்கால் திருநள்ளாறு பூமங்களம் கிராமத்தில் வசிப்பவர் தர். இவரது ஓட்டு வீட்டில் நேற்று முன் தினம் இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த சுரக்குடி தீயணைப்பு துறைனயினர் விரைந்து சென்று, தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.