திருப்பூர்,நவ.9: திருப்பூர் காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரை சேர்ந்தவர் நடராஜன் (எ) பழனிசாமி (68). இவர் சிறுபூலுவபட்டி தபால் நிலையம் பின்புறம் உள்ள தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 2 ஆண்டாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தண்டபாணிக்கும் அவரது உறவினரான சாமுண்டிபுரத்தை சேர்ந்த ராமசாமி (60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக ராமசாமி அடிக்கடி தண்டபாணியின் தோட்டத்திற்கு சென்று பழனிசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ராமசாமி, தண்டபாணிக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பழனிசாமியிடம் தண்டபாணி குறித்து கேட்டுள்ளார்.