நாகை,நவ.6: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமை வகித்தார். நாகை கல்வி மாவட்ட தலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மயிலாடுதுறை கல்வி மாவட்ட செயலாளர் மணிவண்ணன், நாகை கல்வி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 50 ஆண்டு காலமாக பெற்று வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணை 37 மற்றும் 116ஜ உடனே திரும்ப பெற வேண்டும். மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.