கிருஷ்ணகிரி, அக்.22: கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில், காவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, எஸ்பி. பண்டிகங்காதர் ஆகியோர் வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். மேலும் ஏடிஎஸ்பி சக்திவேல், டிஎஸ்பிக்கள் சரவணன், முரளி, தங்கவேல், சங்கீதா, ராஜபாண்டி, இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி, பாஸ்கர், சுரேஷ்குமார், முரளி, செல்வகுமார், வெங்கடாஜலம், மற்றும் எஸ்.ஐக்கள் உள்ளிட்ட காவல்துறையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.