நெல்லை, அக். 16: மானூர் அருகேயுள்ள பள்ளமடையை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் என்ற அமல்ராஜ் (36). சென்னையில் ரயில்வே ஒர்க்ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (31). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் கங்கா என்ற பெண் குழந்ைத இருந்தது. சென்னையில் வசித்து வந்த தம்பதியினர் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் ஆறுமுகநயினார், மனைவி மற்றும் குழந்தையுடன் நெல்லை திரும்பினார். மனைவி மற்றும் குழந்தையை மானூர் அருகே மாவடியில் உள்ள பாக்கியலட்சுமி பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ஆறுமுகநயினார் பள்ளமடைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி குழந்தையுடன் தீக்குளித்தார்.