கோவில்பட்டி, அக். 16: பாஜ நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் லட்சுமணன், நகர பொதுச்செயலாளர் முனியராஜ், செய்தி தொடர்பு பிரிவு தலைவர் னிவாசன், நகரச் செயலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தர்ணாவில் ஈடுபட்டோர், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த சமாதான கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பிறகே சாலை விரிவாக்கப்பணிகளைத் துவங்க வலியுறுத்தி கோஷமிட்டதோடு கோட்டாட்சியர் அறைக்குள் சென்றும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.