ஆர்ப்பாட்டம்

தேனி. அக்.1: கொரோ னா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை கேட்டு தேனி தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பாக சிஐடியு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி-கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தேனி மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா முழு ஊரடங்கின் போது வருமானமின்றி வாழ்வாதாரம் பாதித்த தொழிலாளர்களுக்கு ரூ.2500 நிவாரண நிதி வழங்க வேண்டும். தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories: