திருப்புத்தூர், அக்.1: திருப்புத்தூர் பகுதியின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு ரோடுகளில் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரிலிருந்து திருப்புத்தூர் வழியாக மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான இணைப்பு ரோடுகள் ஊருக்குள் செல்வதற்கு 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு ரோடு வருகிறது. திருப்புத்தூர் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் பல கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு ரோடுகள் உள்ளன. இரவு நேரங்களில் கிராமங்களில் உள்ள இணைப்பு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் போது, நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் தெரிவது கிடையாது.