பெரியகுளம், செப். 30: திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் போஸ் மகன் முரளிதரன் (19), கடந்த 2011 மே 19ல் தேனி வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்கிவிட்டு, தேனி செல்ல அரசு பஸ்சில் ஏறிச் சென்றார். வீரபாண்டி அருகே, பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ்சில் மோதியதில் பலத்த காயமடைந்த முரளிதரன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். முரளிதரன் பயணம் செய்த அரசு பஸ் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கு சொந்தம் என்பதால், அந்த நிர்வாகம் இழப்பீடு வழங்கக்கோரி, பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முரளிதரன் தந்தை வழக்கு தொடர்ந்தார்.