பல்லாவரம்: தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த நோயின் பாதிப்பு இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்டோர், வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் தீவிரமடையும் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் வகையில், அரசும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.