திருவில்லிபுத்தூர், மார்ச் 18: திருவில்லிபுத்தூர் அருகே தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் பலா மரங்களை நாசம் செய்தன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இவை அடிவார பகுதியில் இறங்கி தோப்புகளில் உள்ள மரங்களை அடிக்கடி நாசம் செய்து வருகின்றன. தற்போது அடிவார பகுதியில் பலா மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை பதம் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக யானைக் கூட்டம் ஒன்று அடிவார பகுதியில் முகாமிட்டுள்ளது.