ஓசூர், மார்ச் 18: ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் பிரபாகர்(20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(18) என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஜூஜூவாடி கருமாரியம்மன் கோயில் அருகே மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரபாகர் மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள் கண்ணன் மற்றும் அவரது நண்பர் யஸ்வந்த்குமாரை(18) கத்தியால் குத்தியுள்ளனர்.