போச்சம்பள்ளி, மார்ச் 13: போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி அம்மன் கோயில் விழாவில் திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி கிராமத்தில் திரவுபதியம்மன், செல்லியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்தல், வாணவேடிக்கையுடன் செல்லியம்மனுக்கு தலைகரகம் கூடும் நிகழ்ச்சி ஆகியவையும், 3ம் நாள் காளியம்மன், திரவுபதியம்மன் தேர்வீதி உலாவும் நடைபெற்றது. 4ம் நாள் அர்ஜூனன், திரவுபதியம்மன் தேர் ஊர்வலம் நடைபெற்றது.