ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

கடையம், மார்ச் 13: கடையம் அருகே மேட்டூரை சேர்ந்தவர் குருசாமி (60). மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று  அதிகாலை மேட்டூர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் கால் துண்டான நிலையில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார். நள்ளிரவு 12 மணியளவில் செல்லும் பாலருவி ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தென்காசி ரயில்வே போலீஸ் எஸ்ஐ செய்யது சிக்கந்தர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரிக்கின்றனர்.

Related Stories: