குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பரிதாப பலி

கடையம், மார்ச் 12: கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி, பழைய காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கடையம் மேட்டூர் சாலையில் உள்ள கல்குவாரி குட்டையில் சுப்பிரமணியன் சடலம் மிதந்தது. இதைப் பார்த்தவர்கள் உடனடியாக கடையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ தமிழரசன் மற்றும் போலீசார் சென்று சுப்பிரமணியன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: