வள்ளியூரில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம்

நெல்லை, மார்ச் 12: வள்ளியூர் கல்வி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் மையம் நெல்லையில் அமைக்கப்படுகிறது. செட்டிகுளம், உவரி, குட்டம் போன்ற பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் நெல்லைக்கு சென்று வர சிரமமாக உள்ளது.  எனவே அனைத்து ஆசிரியர்களும் எளிதில் வந்து செல்லும் வகையில் ஏப்ரல் 2020ல் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தை வள்ளியூரிலேயே அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: