சேந்தமங்கலம், மார்ச் 10: கொல்லிமலை அடுத்த செங்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக போலீஸ் ஸ்டேசன் செயல்பட தொடங்கியுள்ளது. கொல்லிமலை வாழவந்திநாட்டில் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக போலீஸ் ஸ்டேசன் செயல்பட்டு வருகிறது. சேந்தமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் கட்டுப்பாட்டில் இந்த போலீஸ் ஸ்டேசன் இயங்குகிறது. கொல்லிமலையில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. 14 நாடுகள் அமைந்துள்ளது. 60 கிலோமீட்டர் பரப்பளவில் கொல்லிமலை மலை கிராமங்கள் ஆங்காங்கே அமைந்துள்ளது. இங்கு புதியதாக ஒரு போலீஸ் ஸ்டேசன் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று செங்கரையில் ஒரு புதிய போலீஸ் ஸ்டேசன் அமைக்கப்பட்டுள்ளது.