ராதாபுரம், மார்ச் 10: கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் அந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ வலியுத்தினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் சஞ்சய்குமாரை இன்பதுரை எம்எல்ஏ நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை எம்எல்ஏ வலியுறுத்தினார். செட்டிகுளம், கூடங்குளம் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி அமைக்க கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு உதவி செய்ய வேண்டும். நம்பியாற்று தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டு வந்து கூடங்குளம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி அணுமின் நிலைய கட்டுமானம் மற்றும் சுய தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.