வத்திராயிருப்பில் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, மார்ச் 6: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் அய்யனார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் புகழேந்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளா்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: